புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி திருவப்பூர் குட்ஷெட் ரோடு பகுதியில் வசிக்கும் அமரர் மெய்யப்பன் சப் இன்ஸ்பெக்டர் மகன் மேனா. மோகன் இவர் இந்து முன்னணியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தவர். மோகன் இன்று காலை வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

