Skip to content

ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியர் உள்ளிட்ட 3 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தும்பிவாலி பகுதியில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரைக் கண்டதும் அந்த வாகனத்தில் இருந்த 3 பேர் தப்பியோட முயற்சித்தனர்.

உடனடியாகச் செயல்பட்ட போலீசார், அவர்கள் 3 பேரையும் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்த பைகளைச் சோதனையிட்டபோது, சர்வதேச சந்தையில் சுமார் 2.15 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் மற்றும் மெபெட்ரான் ஆகிய போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்டவர்களில் ஒருவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இந்தப் போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!