கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி.
கரூர் சட்டமன்றத் தொகுதி, தான்தோன்றி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்டேட் பேங்க் காலனி சின்ன ஆண்டாள் கோவில் ரோடு சின்டிகேட் நகர் முதல் ஆதவ் அப்பார்ட்மெண்ட் மெயின் ரோடு மற்றும் குறுக்கு சாலை வரை தார் சாலை அமைக்கும் பணி, சிமெண்ட் ரோடு அமைக்கும் பணி, சரஸ்வதி நகர், ஆண்டாள் கோவில் புதூர் ,சிந்து நகர், ராஜீவ் காந்தி நகர், சோழன் நகர், சாய் நகர் ,தீரன் நகர், வசந்த் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

