Skip to content

பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர்

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிப்.20-ந்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை அமர்வில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக பிப்.20-ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரையாற்றுவார்.இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!