திருச்சி , ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர் ஆட்டோ ரியாஸ். ஆட்டோ டிரைவர் இவரது மூத்த மகன் ராசிக்(14). இந்த சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது பட்டம் பறக்காமல் சிக்கிக்கொண்டது. அப்போது ராசிக் எட்டி பட்டத்தை எடுக்க முயன்ற போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் அவனது தலையில் பலத்த அடிப்பட்டு மரணத்தை தழுவி விட்டார். இதுகுறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

