பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூரில் பஞ்சராகி நின்ற சின்னத்திரை நடிகை தேவி பிரியாவின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதி

விபத்துக்குள்ளானது. டயரை மாற்றி கொண்டிருந்தபோது பின்னால் வந்து மோதியதில், காரின் டிரைவர் முத்து கணேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது மற்றொரு டிரைவர் திவாகர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

