லக்னோ: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசியாபத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தாத உத்தரப்பிரதேச காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத உத்தரப்பிரதேச மருத்துவமனைக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
