நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. மகளிருக்கான 33% இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஏப்.16-ல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூடியது. நேற்று, மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களித்ததால் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் அந்த மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
