சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், விபத்துகளைக் குறைக்கவும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள் அமைக்க மாநகராட்சி திட்டம். இந்த வழிகாட்டி பலகைகளில் எழுத்துக்களை விட, படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. தமிழ் தெரியாதவர்கள் அல்லது வெளி மாநிலத்தவர்கள் கூட எளிதாக சாலைகளை அறிந்துகொள்ள முடியும்.
