அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஸ்ரீ நறுமலர் பூங்குழல் நாயகி உடனுறை ஸ்ரீ பயறணீஸ்வரர் சுவாமி ஆலயத்தின் உபகோவிலான ஸ்ரீ வில் வளைத்த விநாயகர் ஆலய
மண்டலாபிஷேக பூர்த்தி மற்றும் மஹா தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 80 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் வில் வளைத்த விநாயகர் காண்டீபத்

தீர்த்தத்தில் தெப்ப தேரில் அமர்ந்து மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். உடையார்பாளையம் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களை சார்ந்த 5 ஆயிரத்திற்கும்

மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். (அர்ஜுனனால் ஏற்படுத்தப்பட்ட காண்டிப தீர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது) தொன்று தொட்டு பராமரிக்கப்பட்டு வரும் காண்டீப தீர்த்தத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
