அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதி உதவி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் வடவார்தலைப்பில் வசிக்கும் சிற்றரசன் கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் கார்த்திக் உறைவால் ( sqay ) விளையாட்டு வீரர் ஆவார்.
. ஜூன் மாதம் ஒன்றாம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேசிய உறைவால் விளையாட்டில் நிதி உதவி இல்லாததால் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கத்திடம் மனு அளித்தார்.
மனுவை படித்துப் பார்த்தவுடன் கார்த்திக் காஷ்மீர் சென்று வருவவதற்கு தேவையான நிதி உதவியையும் வழங்கினார்.
நிதி உதவி பெற்றுக் கொண்ட கார்த்தி காஷ்மீரில் வெற்றி பெற்று தனது வெற்றியை சட்டமன்ற உறுப்பினருக்கு சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
