ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை வாங்கி விற்க முயன்ற 3 இளைஞர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலமாகப் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து, அவற்றை இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 3 இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆன்லைன் தளங்கள் மற்றும் கொரியர் சேவைகளைப் பயன்படுத்தி இது போன்ற போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
