கடலூர், கண்ணத்தோப்பு, வடலூர் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடலூர் அருகே பாதி உடல் புதைந்த நிலையில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணில்

முகம் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என தகவல் வௌியாகியுள்ளது. இறந்தவர் யார், கொலை செய்யப்பட்டாரா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
