காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் தீ விபத்தை அடுத்து, தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
