திருச்சி சேர்ந்த 42 வயது பெண்ணிற்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் இவருடைய மகன் பெயர் மணிபாரதி (22). இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கம் உள்ளதால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார் இந்த நிலையில் கடந்த 29ஆதி தேதி தனது தாயிடம் தகராறு செய்து மணி பாரதி அவரை தாக்கிவிட்டார். இது தொடர்பாக தாய் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணி பாரதியை கைது செய்தனர்.
