முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்தdடு ள்ளார். மேலும் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கு முன்பாக அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் கரூரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில், அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் அவர் வழிநடத்தி வரும் “வீ த லீடர்ஸ்” அமைப்பைச் சேர்ந்தவர்கள் அருள் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் அப்போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
