சென்னை காவல்துறையில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காவல் துறையின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரிவு மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்.காவல் ஆய்வாளர்கள் தாரகேஸ்வரி, வீரமணி, ரமேஷ், தீபா உள்ளிட்ட 29 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம். காவல் ஆய்வாளர் ஜெயந்தியை ரயில்வே காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
