தமிழகத்தில் ஆவடி, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதற்காகக் கோரப்பட்டிருந்த டெண்டரை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தவெக அரசின் இந்த தனியார்மயமாக்கல் முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
