உத்தரப் பிரதேச மாநிலத்தில், வீட்டு உரிமையாளரின் 6 வயது மகனை கடத்தி கொலை செய்த வாடகைதாரர் கைது செய்யப்பட்டார். சிறுவனை குல்பி வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்ற கல்பேஷ் ராய் என்பவர், பணம் பறிக்கும் நோக்கில் சிறுவனை கடத்தியதாக கூறப்படுகிறது. சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உடலை பாழடைந்த கட்டடத்தில் விட்டுவிட்டு, குடும்பத்தினருடன் இணைந்து சிறுவனைத் தேடுவது போல நடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
