திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், தனது மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்த கூலித் தொழிலாளியிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வீடியோவுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளி புகார் அளித்திருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனை வளாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த மருத்துவமனை நிர்வாகம், அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் இரண்டு பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
