ஓமன் வளைகுடா பகுதியில் இன்று (ஜூலை 7) இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக,அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், ஹர்முஸ் ஜலசந்தியை தங்கள் அனுமதியின்றி கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது. ஓமனின் லிமாஹ் பகுதி அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து இதுவரை எந்த விவரமும் வெளியாகவில்லை.
