Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்ணிடம் 3.5 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள்

பெண்ணிடம் 3.5 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேவியர் மனைவி அனிதா (45). அனிதா கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள காசி அம்மன் கோயில் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள், அனிதா எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3.5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியைத் திடீரெனப் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினர்.

இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!