சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.3,000 கோடி லஞ்சம் வாங்கிய நான்ஜிங் நகர முன்னாள் அதிகாரி யாங் யூலினுக்கு (69) மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. பதவியைப் பயன்படுத்தி நிலப் பரிமாற்றம், பொறியியல் ஒப்பந்தங்கள் மூலம் மோசடி செய்து நாட்டிற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய இவருடைய செயல், சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான குற்றங்களில் ஒன்று எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
