நடிகை பிரீத்தி ஜிந்தா தொடர்பான டீப் ஃபேக் வீடியோக்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவரது தனிநபர் உரிமைகளை மீறுவதாக தொடரப்பட்ட வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. அந்த போலி உள்ளடக்கங்களை உடனடியாக இணையத்திலிருந்து நீக்க சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
