அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலில், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரண்டு நபர்கள் மது அருந்திக்கொண்டும், புகைபிடித்தவாறும் பயணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பாக அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர்கள் மீது ரயில்வே காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
