சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவர் உடலில் டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்துள்ளார். முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
