நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன. ஈரான்-அமெரிக்க போர் நிறுத்த அறிவிப்பால், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை பெரிதாக உயரவில்லை. தற்போது, அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட, தற்போது மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 13) பெட்ரோல் விலை 1.69 ரூபாய் உயர்ந்து, லிட்டர் ரூ.109.45க்கும், டீசல் விலை லிட்டருக்கு 1.71 ரூபாய் உயர்ந்து ரூ.101.26க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை மீண்டும் 100 ரூபாயை கடந்ததால், வாகன ஓட்டிகள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
