பாரீஸ் அருகே பவுன்டைன்புளூ வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயால் 3,250 ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது. தீ குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியதால் 1,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால் ரயில், நெடுஞ்சாலை போக்குவரத்து முடங்கியது. 1,300 ஹெக்டேர் வனம் அழிந்துள்ளதாக உள்நாட்டு அமைச்சர் லாரென்ட் நுனெஜ் கூறினார். ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
