நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கைதி சபரி வர்மன் மரணமடைந்த வழக்கில் தென் தாமரைக்குளம் எஸ்ஐ பிரைட் பிளசிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ. பிரைட் பிளசிங்கை ஆயுதப் படைக்கு மாற்றி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். குட்கா விற்பனை செய்ததாக சபரி வர்மனை கைது செய்திருந்தவர் எஸ்.ஐ. பிரைட் பிளசிங்; சிறையில் கைதி இறந்த வழக்கில் வார்டன்கள் 3 பேர், கைதிகள் 8 பேர் என இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
