சென்னை வேளச்சேரியில் தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
