தட்டார்மடம் அருகே நரம்புத் தளர்ச்சி நோயால் மனவேதனையில் அதிகப்படியான மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சன்விளை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் அனுசியா (23). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டிலிருந்த இவருக்கு, கடந்த இரண்டு வருடங்களாக நரம்புத் தளர்ச்சி நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காகத் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தொடர் உடல்நலக் குறைபாடு காரணமாக மனவேதனையடைந்த அனுசியா, வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டுள்ளார். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
