தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த தொடர் மின்வெட்டினாலும், மின் கட்டண உயர்வினாலும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
