நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்த நிலையில், டெல்லி காவல் துணை ஆணையர் (DCP) சச்சின் சர்மா முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எனினும், “பிரதமர் அல்லது மத்திய அமைச்சருடன் மட்டுமே பேசுவோம்” என கூறி இந்த அழைப்பை CJP குழுவினர் நிராகரித்து விட்டனர்.
