செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியார் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்தனர் நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த பிரபு வயது 33, வசந்தபுரி பகுதியைச் சேர்ந்த பாலாஜி வயது 20, மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த பாஷாபாய் மற்றும் கடம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் வயது 55, மற்றும் காரணை பகுதியை சேர்ந்த பகவான் ஆகியோர் தனியார் விடுதி வளாகத்தில் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக மேலே உயர் அழுத்த மின் கம்பியில் இரும்பு கம்பி பட்டதால் ஐந்து பேரும் மின்சாரம் தாக்கி அருகருகே தூக்கி வீசப்பட்டனர் இதில் நான்கு பேர் பலியான நிலையில் காரணைப் பகுதியைச் சேர்ந்த பகவான் மட்டும் உயிர் தப்பினார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
