திமுக அயலக அணி இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான புகழ் காந்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த விலகல் கடிதத்தைக் கட்சியின் தலைமையகத்தில் அவர் அளித்துள்ளார். அக்கடிதத்தில், திமுக ஊழல் கூடாரமாகவும் ஒரு சிலரின் சர்வாதிகார அமைப்பாகவும் மாறிவிட்டதாகவும், திறமையான இளைஞர்களுக்குக் கட்சியில் வாய்ப்புகளோ இடமோ அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்
