முதல்வர் விஜயின் கடைசி படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை (ஜூலை.23) வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, படம் வெளியாவதை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நேரத்திற்குள் ஊழியர்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டு பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
