தாய்வானில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், அவரது முன்னாள் காதலிக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முன்னாள் காதலனுக்கு, உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்றம் இளம்பெண்ணுக்கு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தாய்வானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
