காரைக்குடி மகர் நோன்பு திடல் பி ஏ எல் வீதி பழனியப்பா நிவாஸ் இல்லத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில் வீட்டு கதவை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள தங்க நகை வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டு இருக்கலாம் என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
