தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை மத்திய அரசின் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், மருத்துவ இடங்களை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் போனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசின் நிர்வாக தோல்வியால் மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோயுள்ளதாக மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
