டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குரூப் 1 பணிக்கு தேர்வான 78 பேருக்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியிடங்களுக்குத் தேர்வான 48 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.
