திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர், மாணவரை ரத்தக்காயம் வரும் வரை கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், சாதியை குறிப்பிட்டு திட்டியதாகவும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
