அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் துயரத்தை சந்தித்து வரும் அசாம் மக்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி உதவ முன்வருமாறு பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவாரண பணிகளுக்கு பங்களிக்கும் தகவல்களை விரைவில் பகிர உள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
