நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கின் முதல் விசாரணை டில்லி விரைவு கோர்ட்டில் தொடங்கிய நிலையில், CBI தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஆக.3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு அரசு தரப்பில் இருந்து யாரும் ஆஜராகாதது குறித்து டெல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், விரைவு நீதிமன்றத்தின் மூலம் இந்த வினாத்தாள் கசிவு வழக்கு துரிதமாக நடத்தப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
