ராமநாதபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார், மனைவியை செல்லமுத்து என்பவர் வெட்டி கொலை செய்தார். குடும்பத தகராறு காரணமாக இருவரையும் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் செல்லமுத்து சரணடைந்தார். இராமநாதபுரம் வைகை நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, நபர் ஒருவர் போலீஸ் ஸ்டேசனில் நேரில் சென்று சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட செல்லமுத்து என்பவரைக் போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்… சரண்
