உக்ரைனுக்கு ரகசியமாக நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், ரஷிய பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு மாஸ்கோ நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போர்ப்ஸ் ரஷியா இதழில் பணியாற்றி வந்த இவர், தண்டனையை குறைப்பதற்காக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டபோதிலும், மூடிய கதவுகளுக்கு பின் நடைபெற்ற ரகசிய விசாரணையின் முடிவில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
