தூத்துக்குடி விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு, கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கேற்ப, டெல்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களுக்கு போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரிய ரக விமானங்கள் இயக்கப்படும்போது பயணிகளுக்கான கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
