திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில், பேருந்து முனையத்திற்கு செல்வதற்கு பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பெண் மீது ஆட்டோ மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் செல்போன் பார்த்துக் கொண்டு ஆட்டோவை இயக்கியதால் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
