கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது குறைந்த உயரத்தில் பறந்து தண்ணீர் ஊற்ற முயன்றபோது, இரு ஹெலிகாப்டர்களின் சுழல் இறக்கைகள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
