கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
