காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்த இந்த Sofa Model அரசு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தஞ்சாவூரில் பேசியது மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றதாக முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் கூறி இருக்கிறார்.
ஆளும் அரசால் இதை தாங்கி கொள்ள முடியாமல் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. திமுக-வை எந்த வழக்குகளின் மூலமாகவும் பணிய வைக்க முடியாது. வழக்குகளைக் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல திமுக. சட்டப்போராட்டத்தின் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் கூறி உள்ளார்.
